Friday, January 11, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


எத்தனையோ எதிர் பார்ப்புகளுடன்

காத்திருந்து

காதலனின் வருகையில்

கொண்டாடும் மௌனம்....

உன் விழி பார்வையில்

வார்த்தைகளின் விளையாடலில்

ஒளிந்திருக்கும் மௌனம்...

உன் சீண்ட ல்களின்
சத்ததில்லும்

குரு குரு பார்வையிலும்

உள்ளம் பூரிக்கும் மௌனம்...

உன்னை என்னவென்று

வர்ணிக்க முடியாமல்

வார்த்தைகளுக்கான

தேடலில் மௌனம்...

மௌன அழகில்...

உன் உறக்கத்தில் கூட

ஆயிரம்

அர்த்த அலைகள்.....