Monday, June 8, 2009



முகடு பல தாண்டிடு


முழு மூச்சாய் உயர்ந்திடு


முடியும் என்று சொல்லி பார்


முடியாததுவும் முடியும்.........

Thursday, June 4, 2009


பேசாமலேயே இருந்து விடு

காதல் இல்லை சொல் - என்

காதில் விழ வேண்டாம்

மௌனம் காத்து விடுகிறேன்

மௌவலாய்....


Tuesday, June 2, 2009



இருவராய் நடந்தாலும்


தடம் ஒன்றாய்......


உன் வழிப்பற்றி


என் பாதங்கள்......

Thursday, May 28, 2009


உன்னுடனான நினைவுகளில்
என்னுடன் நீ
எப்பொழுதும் இருக்கிறாய்
கண்ணீராய்....

Monday, March 9, 2009

பெண்ணே நீ

கவிதையாய் மிளிர்கிறாய்
காற்றில் தென்றலாய் உலவுகின்றாய்

கற்பனைகள் அலை மோதும்
கடலாய் தவழ்கின்றாய்

காதலின் மெல்லிசையாய்
கருத்துக்களின் கருவிடமாய்
கண்மணி நீ உள்ளாய்
காலத்தின் பெட்டகமாய்

கவியான வாழ்வு தன்னில்
கலக்கம் வேண்டாமடி
கரை தன்னை நீந்திடுவாய்
கண்ணீர் கூடாதடி

வலியின் கொடுமை புரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி
வளர்ந்து விடடி பெண்ணே நீ..
வானம் என்றும் அருகிலடி....