Sunday, May 18, 2008

சீனா பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி

பூமித்தாயே...
புவியைக் காத்தவளே...
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்...

மலையுண்டு

மலை சூழும் முகிலுண்டு
அலையுண்டு
இளைப்பாற கரையுண்டு....
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்?

வசந்தமாய் இருந்த நீ - இன்று

ஒன்றும் இல்லாதவளாய்
இல்லை இல்லை
எப்படி சொல்வது
ஒன்றும் இல்லாதவள் என்று...?

பல்லாயிரம் உயிர்களை

காவு கொண்டு - இன்று
அமைதியாய் இருக்கிறாய்
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம் ?

நீ
கொடுத்த

சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?

உறவுகளை இழந்தவர்கள்

உடைமைகளை இழந்தவர்கள்
பிள்ளைகளை இழந்தவர்கள்
பெற்றோரை இழந்தவர்கள்
எத்தனை ஆயிரங்கள் !
எத்தனை ஆயிரங்கள் !

இத்தனை உயிர்கள் - உனக்குள்
இரையாகிவிட்டு

உன்னுள் உறங்கி விட்டார்கள்
காவு கொண்ட நீ
களைப்பாறுகிறாய்
என்ன குறை
உனக்கு ஏனிந்த சீற்றம் ?

இருப்பவர்களை வாழ விடு

உன்னை நம்பி இருப்பவர்களை
உய்ய விடு....

உலகுள்ள வரை

உன்னை மறவோம் ...
நீங்காத நினைவலைகளையல்லவா
நீ கொண்டாய்...உனக்குள்ளே
ஒரு ஆணையிடு

எல்லை கோடு இடு...

போதுமம்மா தாயே

உன் சீற்றம் ....
உன் மடிவந்தோரை
வாழவிடு...

இனி ஒரு
ஜென்மம் எனினும்

பூகம்பப்பிறவி
உனக்கு வேண்டாம்

வேண்டவே வேண்டாம்....