Tuesday, May 6, 2008

மரிக்கொழுந்து

பருத்திக்காட்டு விளைச்சலிலே
மச்சான் உன்ன பாத்துப்புட்டேன்
பாளையத்து மகமாயி
பக்கம் இருந்து துணை இருப்பா

கம்மங்கூழ கரைச்சு வச்சு
கருவாட்டுக் குழம்பு கொண்டாந்தேன்
உன் கைய புடிச்சு கரை சேர
கருமாரி வந்து காத்திடணும்

வானத்த பாத்து நிக்கேன்
வழியெல்லாம் தேடி அலைஞ்சேன்
மாமன் உன்ன சேரத்தானே
மாமாங்கமாய் காத்து கெடக்கேன்

அப்பனையும் ஆத்தாளையும் விட்டுப்புட்டு
உன்ன மட்டும் நம்பி வந்துப்புட்டேன் கழுத
விளையாட்டா ஏதும் செய்யல
விட்டுப்புடாத ஆமா

மஞ்சத் தண்ணி ஊத்தயிலே
மாமா உன்ன நினைச்சுப்புட்டேன் - ஒரு
மஞ்சத் தாலி கட்டிப்புடு
உன் கைய கோத்துக்கிட்டு வாரேன்

தென்ன மரக் கீத்து போட
தாய் மாமன் நீயும் வந்த
அருக்கானி சடை போட்டு
அழகா நானும் நிக்கேன்

மாமனுக்கு வாக்கப்பட்டு
வாழத் தானே வந்தேன்
மரிக்கொழுந்து வாசத்துல
மயங்கி நீயும் போன

பொட்டு வச்சு பூ முடிச்சு
புதுப்பொண்ணா வாரேன்
பூவாத்தா வாழ வப்பா
பூ மாலை நீ போடு....