Friday, June 13, 2008

தூரிகையாய்

பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்
ஒன்றாகவேனும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேனும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேனும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேனும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேனும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேனும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேனும்....