Thursday, February 14, 2008

நானும் ஒற்றை ரோஜாவும்








என் விழிகளுக்கான தேடலில்
உன்னை தந்தாய்
காதல் எனும் கவிதை தந்தாய்...

பனி துளி ஒவ்வொன்றிலும்
உன் அழகு முகம்...
என் கண்ணீர் துளி ஒவ்வொன்றிலும்
நம் காதல் பிம்பம்...

காதல் எனும் கோட்டையில்
கைதியாகிய நான்...
உன் மன கோவிலில்
பாடி திரியும் பட்சி...

ஒன்றோன்றாக உன்னிடம்
இருந்து திருடிய என்னை
மொத்தமாக திருடி விட்டாய்
உன் ஒரே ஒரு புன்னகையால்...

உன் நினைவுகளின் பிடியில்..
நானும்
நீ கொடுத்த
ஒற்றை ரோஜாவும்...

Friday, January 11, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


எத்தனையோ எதிர் பார்ப்புகளுடன்

காத்திருந்து

காதலனின் வருகையில்

கொண்டாடும் மௌனம்....

உன் விழி பார்வையில்

வார்த்தைகளின் விளையாடலில்

ஒளிந்திருக்கும் மௌனம்...

உன் சீண்ட ல்களின்
சத்ததில்லும்

குரு குரு பார்வையிலும்

உள்ளம் பூரிக்கும் மௌனம்...

உன்னை என்னவென்று

வர்ணிக்க முடியாமல்

வார்த்தைகளுக்கான

தேடலில் மௌனம்...

மௌன அழகில்...

உன் உறக்கத்தில் கூட

ஆயிரம்

அர்த்த அலைகள்.....

Thursday, December 20, 2007

பெண்


பெண் என்பவள் ஒரு அற்புதம்

அவள் அசைந்தாடும் ஒரு அதிசயம்...


பெண் புகழ் பாடா கவிகன் இல்லை

பெண் இன்றி தலைமுறை இல்லை...


அடுககளையிலும் உறைந்திடுவாள் -அவளுக்கு

அணு உலையும் ஒரு சாதனை கூடம் தான்....


மணிக் கொன்றாய் புகழை ஏற்றி விடு

மகுடம் தன்னை முன்னில் சூடி விடு...


பெண்ணே.... நீ

மலரென்றாலும்

மலையின் வலிமை

உன்னுள் !!!

Wednesday, December 19, 2007

சரணம் ஐயப்பா


விடிகாலை சரண கோஷம்

செவியின் ஊடே அமுதூறும்

சரணம் ஐயப்பா தொழும் நேரம்

கவலையெல்லாம் ஓடி போகும்


மகர ஜோதி கண்டு விட்டாலோ

பனி போல துன்பம் நீங்கும்...


ஒவ்வொரு படியிலும் ஐயன் திருப்படி

ஓங்கார நாதத்தின் ஒலிப்ப்டி

ஒய்யார வாழ்விர்க்கு அது அடி....


பம்பை ஓரம் பக்தர்கள் ஸ்நானம்

பாவங்கள் அகலும் நேரம்...


எரிசெறியில் ஆட்டம்

வண்ண பூச்சுகளில் அலங்காரம்......


அய்யனை கண்டு விட்டாலோ

ஆனந்த மயம்..

ஐயப்ப் தரிசனம் கோடி புண்ணியம்....

Tuesday, December 18, 2007

விழியால் ஒரு பார்வை


இதயம் ... என் விழிகள்

இரண்டும் ஒன்றே...

உன்னை நினைப்திலும்

உன்னை இமைப்பதிலும்....

நினைவில் நின்ற மழைக் காலம்


மழை வரும் காலம்

மன் வாசனை வீசும்

மகிழ்ச்சியில் உள்ளம் ததும்பும்

மதில் சுவர் நீர் ஒழுகி

வீட்டு முத்தத்தில் தங்கும்...

இராமர் பச்சை கோடு போட்ட டாப்ப்

ஒழுகும் போது வைத்து கொள்ள...

நீர்க்குமிழி ஒவ்வொன்றும்

நிலையில்லா வாழ்வை புலப்படுத்தும்

இருக்கும் வாழ்வை அனுபவி என்று...


தம்பியும் நானும்

அம்மாவின் உதவியுடன்

விடுவோம் காகித TITANIC...

அதுவும் மூழ்கியது

மழையின் துளிகளால்....


ஆசை யாரை விட்டது

எடுடா இன்னொரு பேப்பர்

அம்மா கத்து வாள்...!!!


ஒண்ட கூட இடம் இல்லாமல்

உண்ண இருந்த தட்டுகள் எல்லாம்

தரையின் மேல் பல்லாங்கிகுழிகளாய்

ஆனால்....

மூலைக்கு ஒவ்வொன்றாய்...

ஒவ்வொரு வீட்டிற்கும்

மழை நீர் தொட்டி....

இல்லாதவருக்கு

இல்ல மே தொட்டி..

மழையில் நனைந்து விட்டு

வரும் தும்மல் கூட

சுகமாய் இருக்கும்..

இன்னும் நனைய தூண்டும்...

பள்ளி விட்டு திரும்பும் பொழுது

புத்தக பை நனையாமல்

காக்கும் அழகே அழகு.....


காலணியை கையில் கொண்டு

ஓடும் நீரில் கால்கள் துள்ளல் போடும்..

குட்டி குட்டி தவளைகள் கும்மாளம் அடிக்கும்....

அந்த குளிரிலும்

மின் விசிறி ஐந்தில் சூழலும்...

சூட சூட பஜ்ஜி சுண்டி இழுக்கும்....

எந்த காலம் வந்தாலும்....

மழைக்காலத்துக்கு மவுசு அதிகம் தான்

மகிழ்ச்சியும் அதிகம் தான்.........

Monday, December 17, 2007

எப்போது வருவாய்


பசுமையான புல்வெளி

சில்லென்ற தென்றல் காற்று

யாரும் இல்லாத சாலை

சலனம் இல்லாத அமைதி

பக்கத்தில் நீ ! ! !


தழய உடுத்திய சேலை

தலை நிறைய மல்லி

நெற்றி வகுடில் பொட்டு

கண்ணில் தீட்ட்ய மை

கை குலுங்க கண்ணாடி வளையல்

பக்கத்தில் நீ ! ! !

காலார நடை

களங்கமற்ற வார்த்தைகளிபூட்டும்

பாடல் களைப்பார தேநீர்

பக்கத்தில் நீ ! ! !


உச்சியில் இட் முத்தம்

உன்னோடு இருந்த நாட்கள்

உயிருடன் பழகிய தருணம்

உயிரோடு நான்

பக்கத்தில் நீ

எப்போது வருவாய் ! ! !