Thursday, February 14, 2008

நானும் ஒற்றை ரோஜாவும்








என் விழிகளுக்கான தேடலில்
உன்னை தந்தாய்
காதல் எனும் கவிதை தந்தாய்...

பனி துளி ஒவ்வொன்றிலும்
உன் அழகு முகம்...
என் கண்ணீர் துளி ஒவ்வொன்றிலும்
நம் காதல் பிம்பம்...

காதல் எனும் கோட்டையில்
கைதியாகிய நான்...
உன் மன கோவிலில்
பாடி திரியும் பட்சி...

ஒன்றோன்றாக உன்னிடம்
இருந்து திருடிய என்னை
மொத்தமாக திருடி விட்டாய்
உன் ஒரே ஒரு புன்னகையால்...

உன் நினைவுகளின் பிடியில்..
நானும்
நீ கொடுத்த
ஒற்றை ரோஜாவும்...

1 comment:

நிலாரசிகன் said...

//ஒன்றோன்றாக உன்னிடம்
இருந்து திருடிய என்னை
மொத்தமாக திருடி விட்டாய்
உன் ஒரே ஒரு புன்னகையால்...//

ஒன்றொன்றாக.

//உன் நினைவுகளின் பிடியில்..
நானும்
நீ கொடுத்த
ஒற்றை ரோஜாவும்... //

வலி மிகுந்த வரிகள்.நானும் உணர்ந்திருக்கிறேன்/உணருகிறேன்.

கவிதை நன்று.