Wednesday, May 14, 2008

சுடும் நிலவு


அறுவை சிகிச்சை அறை பார்த்து
அறை கூவல் எழுப்பும்
அருகாமையின் மத்தியிலும்
நம்பிக்கை சுடர் கொள்ளும் மங்கை...

கொண்டவனை காப்பாற்ற
கையேந்தும் நிலையிலும் - தன்
மாங்கல்யம் காக்க
மானம் காக்கும் நங்கை
வளைவுகளின் கிடுக்குகளில்
எங்கிருந்தோ கசிந்து
கொண்டிருக்கும் தண்ணீராக - இவள்
கவலையுடன் சிந்தும் கண்ணீர்...

ஏங்கும் விழிகளுடன்
தண் நிலவு கண்டு
வானம் பார்த்தாலும்
இவளுக்கு மட்டும் - அது
சுடும் நிலவாய்....

5 comments:

Ramya Krishnamoorthy said...

Super di

Unknown said...

nice

கௌசல்யா சங்கர் நம்பி said...

thanks di... :)

கௌசல்யா சங்கர் நம்பி said...

Nandri Kadal

நிலாரசிகன் said...

நல்லதொரு கவிதை. நிறைய எழுதுங்கள். மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன்.