பூங்காவின் நெரிசலில்
ஒரு ஓரமாய் நின்றிருந்தேன்
நிஜங்களின் நிதர்சனங்களும்
நிழலாடும் எண்ணங்களும்
அலைகளாய் ஆடி சென்றன
மனதுள்....
வார்த்தை பரிமாற்றங்களும்
வசந்தத்தின் கற்பனைகளும்
வாயிலின் முன்
நேர் கோடுகளாய்
வரிசையாய் சென்ற
எறும்புகளின் தேடல்களும்
எண்ணங்களின் இசை பாடல்களும்
எல்லையில்லா ஆசையாய் ....
வலை கிழிந்து கீழ் விழுந்த
சிலந்தியின் வலியும்
ஆதரவிழந்து தட்டேந்திய
சிறுவனின் வலியும்
கணக்கத்தான் செய்தது
காத்திருத்தலாய்...
எப்போதும் அந்த மரத்தின் அடியில்
நிற்கும் கிழவியை காண வில்லை
இன்று யாரும் இல்லை
நாளை யாரோ.....
நாளையும் செல்வேன்
வலை பின்னிய சிலந்தியையும்
வலை பின்னிய சிலந்தியையும்
பாட்டி நின்ற வெற்றிட மரத்தையும்
கண் முன்னே காண
3 comments:
arumai !!!
hi unkada kavithai rompa rompa alaka yeruku
nilanthan
alakana kavithai
Post a Comment