Saturday, June 21, 2008

முகவரி கொடுத்த - உன்
கொலுசை கொஞ்சம்
திருப்பி கொடு - என்
இதய ஒலிக்கு
உயிர் ஊட்டட்டு ம்

மூதாட்டி

சிங்கார சென்னை
ஆரவார மிக்க சாலை
அலுவலகம் பயணிக்கும் மக்கள்
ஆரவாரமாய்....
தூரமாக ஒரு மூதாட்டி
கிழிந்த காதில் பாம்படம்
வெற்றிலை மென்ற சிகப்பில்
கரையூன்றிய பற்கள்...
வயது முதிர்வின் அடையாளம்
தோலின் சுருக்கங்கள்
70 அல்லது 80 இருக்கும் !
நரம்புகள் புடைத்திருக்கும்
சங்குக் கழுத்து வெற்றிடமாய் !
தளர்ந்த கால்கள்
காலணி கூட இல்லாமல்!
புரையோடிய கண்கள் - ஒரு பக்கமாய்
தழும்பியிருக்கும் கண்ணீர் !
கூனிக் குறுகிய தேகம்
ஏக்கத்துடன் பார்வை
பெற்ற மக்கள் வருவாரோ!
கையில் தாங்கியிருக்கும்
மஞ்சள் நிற கைப்பை !
எந்த முதியோர் இல்லம் செல்ல
இங்கு காத்திருக்கிறாய் அம்மா?
வாழ்ந்தே ஆக வேண்டும்
வயிற்றுக்காக ...
சிக்னல் ஓரமாய்
நான் கண்ட மூதாட்டி
கவி பாட வைத்தவள் - என்னை
கலங்க வைத்தவள்

Thursday, June 19, 2008

பூஞ்சோலை

புளியங்காட்டு தோப்புக்குள்ள
புளி பறிக்க நா போனேன்
பூஞ்சோலை என் பேரு
பொன்னாத்தா பெத்த மவ....

ஆனா ஆவன்னா அறியலையே
அப்பனாத்தா படிக்கலையே
கொட்டு வாங்கி படிச்சாலும்
புத்தியில ஏறலையே

வெளகெண்ணை வழிச்சு சீவி
ரெட்டை சடை பூச்சூடி
பள்ளிக்கூடம் போக சொன்னா
பாண்டியாட போனேனே

தெம்மாங்கு காத்து வாங்கி
தெருவெல்லாம் ஆடி புட்டு
அரச மர நிழலுக்கு தான்
துணையாக நின்னேனே

ஆத்துல மீனு புடிச்சு
கரையோரம் நெருப்பு மூட்டி
வக்கணையா வறுத்து தின்னு
வீடு வந்து சேந்தேனே

ஆண்டிபட்டி அரசம்பட்டி
அய்யாளத்து பாப்பம்பட்டி
ஆச மச்சான் நடந்து வந்தான்
பட்டு சட்டை வேட்டி கட்டி

ஆத்தோரம் புள்ளையாரு
ஆலமர அய்யனாரு
நேந்துக்கிட்டேன் நிசமாவே
மூணு முடி நீ போட...
அயித்த மகன் வந்தானேனு - ஆத்தா
ஆடு வெட்டி குழம்பு வச்சா
அயிர மீனு வறுத்து வச்சு....
உசுரா நானும் நின்னேனே

ஆட்டுக்கடா வெட்டி போட்டு
எலும்புக்கறி எடுத்து வச்சேன்
நறுநறுனு கடிச்சு துப்பி
நாசூக்கா கண்ணடிச்சான்
கண்ணால சாடை காட்டி
கை கழுவ மாமன் போக
பின்னால நான் போயி
கம்மாங்கரை சேந்தேனே....
பின்னால மாமன் வந்து
முன்னால என்ன கட்டி...
முழு முகத்த மறைச்சு வச்சு
முழம் பூவு குடுத்தானே
ஆச மச்சான் திரும்பி வர
ஆறேழு வருசமாகும்
ஆறேழு வருசங்கூ ட
ஆத்து நீரா ஓடி போகும்

நா என்னனு சொல்லி
புரிய வப்பேன்
நீ இல்லாத நாள
எதுக்குள்ள எழுதி வப்பேன்

வெவரம் புரியா என்ன
விட்டு தொலைஞ்சு போனா
நான் எங்க போவேன்டா
நாண்டுகிட்டு சாவேன்டா
நின்னா உன்ன காங்கேன்
உக்காந்தா உன்ன நெனைக்கேன்
உசிரு போயி சேருமுன்னே
வெரசா நீயும் வந்துடைய்யா
பெத்த மனசு தாங்காம
மருத்துவச்சிக்கு சொல்ல... - இது
மேலுக்கு வந்த நோயில்ல
மச்சான் மேல வந்த நோயின்னு ....
மச்சான் உன்ன காங்காம
மாமாங்கமா காத்திருக்கேன்
மார்கழி மாசக் குளிரு கூட
கத்திரி வெயிலா கொளுத்துதய்யா
எங்க நீ இருந்தாலும்
பூஞ்சோலை இங்க இருக்கா....
உசிர இறுக்கா புடிச்சுகிட்டேன்
உன் மடில உசிர விட....


Friday, June 13, 2008

தூரிகையாய்

பனித் துளி வந்தமர்ந்த மலர்களில்
ஒன்றாகவேனும்
முகில் கூட்டம் குடி கொள்ளும்
மலையாகவேனும்
வானவில் கட்டிக்கொண்ட
நிறமாகவேனும்
வலி கொண்ட பாதைக்கு
வழியாகவேனும்
இதழ் சுவை இதமளித்த
அதரமாகவேனும்
தென்றல் காற்றில் வீசப்பட்ட
சருகாகவேனும்
நீ
நினைத்திருந்த
உன் நிழல் ஓவியங்களின்
தூரிகையாய்
நானாகாவேனும்....

Sunday, May 18, 2008

சீனா பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி

பூமித்தாயே...
புவியைக் காத்தவளே...
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்...

மலையுண்டு

மலை சூழும் முகிலுண்டு
அலையுண்டு
இளைப்பாற கரையுண்டு....
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்?

வசந்தமாய் இருந்த நீ - இன்று

ஒன்றும் இல்லாதவளாய்
இல்லை இல்லை
எப்படி சொல்வது
ஒன்றும் இல்லாதவள் என்று...?

பல்லாயிரம் உயிர்களை

காவு கொண்டு - இன்று
அமைதியாய் இருக்கிறாய்
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம் ?

நீ
கொடுத்த

சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?

உறவுகளை இழந்தவர்கள்

உடைமைகளை இழந்தவர்கள்
பிள்ளைகளை இழந்தவர்கள்
பெற்றோரை இழந்தவர்கள்
எத்தனை ஆயிரங்கள் !
எத்தனை ஆயிரங்கள் !

இத்தனை உயிர்கள் - உனக்குள்
இரையாகிவிட்டு

உன்னுள் உறங்கி விட்டார்கள்
காவு கொண்ட நீ
களைப்பாறுகிறாய்
என்ன குறை
உனக்கு ஏனிந்த சீற்றம் ?

இருப்பவர்களை வாழ விடு

உன்னை நம்பி இருப்பவர்களை
உய்ய விடு....

உலகுள்ள வரை

உன்னை மறவோம் ...
நீங்காத நினைவலைகளையல்லவா
நீ கொண்டாய்...உனக்குள்ளே
ஒரு ஆணையிடு

எல்லை கோடு இடு...

போதுமம்மா தாயே

உன் சீற்றம் ....
உன் மடிவந்தோரை
வாழவிடு...

இனி ஒரு
ஜென்மம் எனினும்

பூகம்பப்பிறவி
உனக்கு வேண்டாம்

வேண்டவே வேண்டாம்....

Wednesday, May 14, 2008

சுடும் நிலவு


அறுவை சிகிச்சை அறை பார்த்து
அறை கூவல் எழுப்பும்
அருகாமையின் மத்தியிலும்
நம்பிக்கை சுடர் கொள்ளும் மங்கை...

கொண்டவனை காப்பாற்ற
கையேந்தும் நிலையிலும் - தன்
மாங்கல்யம் காக்க
மானம் காக்கும் நங்கை
வளைவுகளின் கிடுக்குகளில்
எங்கிருந்தோ கசிந்து
கொண்டிருக்கும் தண்ணீராக - இவள்
கவலையுடன் சிந்தும் கண்ணீர்...

ஏங்கும் விழிகளுடன்
தண் நிலவு கண்டு
வானம் பார்த்தாலும்
இவளுக்கு மட்டும் - அது
சுடும் நிலவாய்....

Tuesday, May 6, 2008

மரிக்கொழுந்து

பருத்திக்காட்டு விளைச்சலிலே
மச்சான் உன்ன பாத்துப்புட்டேன்
பாளையத்து மகமாயி
பக்கம் இருந்து துணை இருப்பா

கம்மங்கூழ கரைச்சு வச்சு
கருவாட்டுக் குழம்பு கொண்டாந்தேன்
உன் கைய புடிச்சு கரை சேர
கருமாரி வந்து காத்திடணும்

வானத்த பாத்து நிக்கேன்
வழியெல்லாம் தேடி அலைஞ்சேன்
மாமன் உன்ன சேரத்தானே
மாமாங்கமாய் காத்து கெடக்கேன்

அப்பனையும் ஆத்தாளையும் விட்டுப்புட்டு
உன்ன மட்டும் நம்பி வந்துப்புட்டேன் கழுத
விளையாட்டா ஏதும் செய்யல
விட்டுப்புடாத ஆமா

மஞ்சத் தண்ணி ஊத்தயிலே
மாமா உன்ன நினைச்சுப்புட்டேன் - ஒரு
மஞ்சத் தாலி கட்டிப்புடு
உன் கைய கோத்துக்கிட்டு வாரேன்

தென்ன மரக் கீத்து போட
தாய் மாமன் நீயும் வந்த
அருக்கானி சடை போட்டு
அழகா நானும் நிக்கேன்

மாமனுக்கு வாக்கப்பட்டு
வாழத் தானே வந்தேன்
மரிக்கொழுந்து வாசத்துல
மயங்கி நீயும் போன

பொட்டு வச்சு பூ முடிச்சு
புதுப்பொண்ணா வாரேன்
பூவாத்தா வாழ வப்பா
பூ மாலை நீ போடு....