Sunday, May 18, 2008
சீனா பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி
புவியைக் காத்தவளே...
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்...
மலையுண்டு
மலை சூழும் முகிலுண்டு
அலையுண்டு
இளைப்பாற கரையுண்டு....
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்?
வசந்தமாய் இருந்த நீ - இன்று
ஒன்றும் இல்லாதவளாய்
இல்லை இல்லை
எப்படி சொல்வது
ஒன்றும் இல்லாதவள் என்று...?
பல்லாயிரம் உயிர்களை
காவு கொண்டு - இன்று
அமைதியாய் இருக்கிறாய்
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம் ?
நீ
கொடுத்த
சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?
உறவுகளை இழந்தவர்கள்
உடைமைகளை இழந்தவர்கள்
பிள்ளைகளை இழந்தவர்கள்
பெற்றோரை இழந்தவர்கள்
எத்தனை ஆயிரங்கள் !
எத்தனை ஆயிரங்கள் !
இத்தனை உயிர்கள் - உனக்குள்
இரையாகிவிட்டு
உன்னுள் உறங்கி விட்டார்கள்
காவு கொண்ட நீ
களைப்பாறுகிறாய்
என்ன குறை
உனக்கு ஏனிந்த சீற்றம் ?
இருப்பவர்களை வாழ விடு
உன்னை நம்பி இருப்பவர்களை
உய்ய விடு....
உலகுள்ள வரை
உன்னை மறவோம் ...
நீங்காத நினைவலைகளையல்லவா
நீ கொண்டாய்...உனக்குள்ளே
ஒரு ஆணையிடு
எல்லை கோடு இடு...
போதுமம்மா தாயே
உன் சீற்றம் ....
உன் மடிவந்தோரை
வாழவிடு...
இனி ஒரு
ஜென்மம் எனினும்
பூகம்பப்பிறவி
உனக்கு வேண்டாம்
வேண்டவே வேண்டாம்....
Wednesday, May 14, 2008
சுடும் நிலவு

கொண்டவனை காப்பாற்ற
மாங்கல்யம் காக்க
ஏங்கும் விழிகளுடன்
தண் நிலவு கண்டு
Tuesday, May 6, 2008
மரிக்கொழுந்து
மச்சான் உன்ன பாத்துப்புட்டேன்
பாளையத்து மகமாயி
பக்கம் இருந்து துணை இருப்பா
கம்மங்கூழ கரைச்சு வச்சு
கருவாட்டுக் குழம்பு கொண்டாந்தேன்
உன் கைய புடிச்சு கரை சேர
கருமாரி வந்து காத்திடணும்
வானத்த பாத்து நிக்கேன்
வழியெல்லாம் தேடி அலைஞ்சேன்
மாமன் உன்ன சேரத்தானே
மாமாங்கமாய் காத்து கெடக்கேன்
அப்பனையும் ஆத்தாளையும் விட்டுப்புட்டு
உன்ன மட்டும் நம்பி வந்துப்புட்டேன் கழுத
விளையாட்டா ஏதும் செய்யல
விட்டுப்புடாத ஆமா
மஞ்சத் தண்ணி ஊத்தயிலே
மாமா உன்ன நினைச்சுப்புட்டேன் - ஒரு
மஞ்சத் தாலி கட்டிப்புடு
உன் கைய கோத்துக்கிட்டு வாரேன்
தென்ன மரக் கீத்து போட
தாய் மாமன் நீயும் வந்த
அருக்கானி சடை போட்டு
அழகா நானும் நிக்கேன்
மாமனுக்கு வாக்கப்பட்டு
வாழத் தானே வந்தேன்
மரிக்கொழுந்து வாசத்துல
மயங்கி நீயும் போன
பொட்டு வச்சு பூ முடிச்சு
புதுப்பொண்ணா வாரேன்
பூவாத்தா வாழ வப்பா
பூ மாலை நீ போடு....
Tuesday, April 29, 2008
சின்ன வயதில் பாடிய பாடல்கள்
1)நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்....
அடுத்தது கை வீசம்மா கை வீசு... :)
2)கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் திங்கலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் நடக்கலாம் கை வீசு
கோவிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு......
3)தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும்
உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணாவுக்கு ரெண்டு
எனக்கு ஒன்னு..
இந்த பாட்டு அம்மா சொல்லி தரும் போது நான் நிறைய
கேள்வி கேட்டதாக சொல்லி இருக்காங்க ...
எனக்கு தான் அண்ணாவே இல்லையே
அப்புறம் ஏன் அவனுக்கு ரெண்டு?(இது தான் என்னுடைய கேள்வி :))
மழை வரும் போதெல்லாம் பாடி மகிழ்ந்த பாடல்....
4)வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூரலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் ஆடுமே
தண்ணீரிலே ஆடுமே...
இந்த பதிவினை துவங்கி
சிறு வயது பாடல்களை
பதிவுசெய்ய வைத்து ....
மலரும் நினைவுகளை
அசை போட செய்த
பிரேமுக்கு ....ஒரு ஓ ஓ ஓ
நன்றி பிரேம்....
நான் யாரை மாட்டி விட போறேனா.....
இவங்க மூணு பேரை தான்...:)
Friday, April 25, 2008
அந்த கணம்
ஒரு வழி பாதையில்
நினைவுகளின் சிறையில்
நின்று கொண்டு இருக்கிறேன்
சன்னல் ஓரம் கண்ணீருடன்
சிறு சிறு ஆனந்தம் பருகிய
தினங்களை
திரும்பி பார்க்கிறேன்
இரட்டை சடை முடித்து
கட்டி அணைத்த புத்தகப் பையுடன்
கற்பனை சிதற விட்டு
பள்ளி நோக்கி சென்றேனே
அந்த கணம்...
மாலை வேளை வகுப்பு முடிந்து
இல்லம் திரும்பும் வரை - ஒரு
இதயம் என்னை தொடர்ந்ததே
அந்த கணம்...
வீட்டு பாடம் எழுதுகையில்
புத்தக நடுவில்
பச்சரிசி போட்டு
மையிலிறகு குட்டி போட்டதை
ரசித்தேனே அந்த கணம்...
ஊரே மழைக்கு ஒதுங்கி நிற்க
குடை விட்டெறிந்து
நானும் நீயும் மட்டும்
நனைந்தோமே
அந்த கணம்...
ஒரு மாலை வேளை
ஒரு வழி பாதையில்
இலையுதிர் கால சிதறல்களாய்
என்றும் நிழலாடும்
அந்த கணம்...
Thursday, April 10, 2008
இப்படிக்கு ரோஸ்

03-04-08நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள்ஹேமா ஆசிரியை, ஸ்ரீதேவி மாடல்மற்றும் தனது எழுத்து மூலம் சமூகத்தின் பார்வையை
தனது பக்கம் திசை திருப்பிய "நான் சரவணன் வித்யா "புகழ்
லிவிங் ஸ்மைல் வித்யா"...நிகழ்ச்சி பார்த்த எனக்குள் முதலில் உண்மையாகவே இவர்கள் திருநங்கைகள் தானா என்ற ஒரு பெரிய சந்தேகம். மூவரின் வார்த்தைகளிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது அவர்களின் தன்னம்பிக்கை.
திருநங்கை ஹேமா திருமணம் ஆனவர் அதிலும் காதல் திருமணம் என்று கூறிய பொழுது சமூகத்தில் இன்னும் இருதயம் உள்ளவர்கள் உலவுகிறார்கள் என்பது புலப்பட்டது.
அவரும் அவருடைய கணவரும் ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து
வளர்க்கிறார்கள் என்று கேட்டபொழுது அவர்கள் மேல் உள்ள மரியாதை
இன்னும் மேலோங்கியது
அவருடைய அம்மா மற்றும் கணவர் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டுஅரவணைத்ததுஉண்மையாகவரவேற்கதக்கது.ஊனமுள்ள பெண்களையும்,கைம்பெண்களையும் வாழ்க்கைத் துணைவியாக ஏற்று கொள்ள தயங்கும் இந்த சமூகத்தில் இருக்கும் ஆண்களுக்கு மத்தியில் திருநங்கை ஹேமா அவர்களை திருமணம் புரிந்து திருமதி ஆக்கிய அந்த மனிதருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல ...
அடுத்தது ஸ்ரீதேவி மாடல் துறையில் இருப்பவர்.அவருடைய வீட்டில்
பெற்றெடுத்த தாயே ஒதுக்கிய சமயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்வை
எதிர் கொண்டவர்.மும்பையில் எட்டு வருட வாழ்க்கைக்கு பிறகு மீண்டும்
பிறந்த வீடு வந்த பொழுதும் ஏற்க மனமில்லை பெற்றவளின் இதயத்தில் ...
அவருடைய அண்ணியின் உதவியாலும் ஆதரவாலும் கொஞ்சம் கொஞ்சமாக
தாயின் அன்பிற்கு பாத்திரமானவர். இப்பொழுது அந்த தாய் அவரை ஒரு
குழந்தையாக பாவிக்கி றார் என்று கூறிய பொழுது தாய்மை வென்றது. எல்லோரையும் தனது எழுத்தால் கவர்ந்தவர் லிவிங் ஸ்மைல் வித்யா. பெயரிலேயே அவரின் புன்னகை எடுத்து உரைக்கிறது அவரின் தன்னம்பிக்கை. ஒவ்வொரு வார்த்தை பேசும் பொழுதும் அப்படி ஒரு தெளிவு.
சென்னையில் நடந்த புத்தக கண் கா ட் சியில் இவர் எழுதிய நான் (சரவணன் ) வித்யா வாங்கி படித்த பொழுது தான் தெரிந்தது திருநங்கைகள் இந்த சமூகத்தில் எதிர் கொள்ளும் அவலம்.புத்தகம் வாங்கி படித்து கலங்கியவர்களில் நானும் ஒருத்தி.நேற்றைய நிகழ்ச்சியில் நேரில் கண்ட பொழுது அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் திரு நங் கை க ளை பற்றி தவறாக நினைப்பவர் களுக்கு ஒரு பாட ம்.நடந்த சில நிகழ்வுகளை கண் முன் நி றுத் திய பொழுது படிக்கும் போது ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிக்கவே செய்தது.நிகழ்ச்சியை வழங்கிய திருநங்கை ரோஸ் இவரிடம் காதல் அனுபவம் உள்ளதா என்று கேட்ட பொழுது வெட்கத்துடன் ஒப்பு கொண்டார். அவருடைய குடும்பத்தாரும் ஹேமாவின் குடும்பத்தினரை போல ஒப்பு கொண்டு விரைவில் திருமதி பதவி அடைய வித்யாவிற்கு வாழ்த்துக்கள் .ஒவ்வொரு நிகழ்வுகளை சொல்லும் போதும் கண்களில் கண்ணீர் தழும்பினாலும் புன்னகை கண்களையும் இதழையும் தழுவி கொண்டே இருந்தது.
லிவிங் ஸ்மைல் வித்யாதனக்கு இட்டு கொண்ட பெயர் மிகவும் பொருத்தம் என்பதை அழுத்தமாக உறுதி படுத்தியது.நிகழ்ச்சியை நே ர் த் தி யா க கொண்டு சென்ற திருநங்கை ரோஸ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மொத்தததில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி சமூகததில் ஒரு மிக பெரிய மாற்றம் கொண்டு வரும் என்று
நினைத்து பார்க்கும் பொழுது ஒரு மன நிறைவு.நல்ல பல நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டு இருக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு "இப்படிக்கு ரோஸ்" இன்னுமொரு "மைல் கல்"இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டாலாவது சமூகத்தில் திருநங்கைகள் மீதுள்ள தவறான எண்ணங்கள், அருவருப்பான பார்வைகள் விலகுமாயின் திருநங்கைகள்வாழ்வும் ஒளி மயமாகும் என்பதில்
எள்ளளவும் அய்யமில்லை.
திருநங்கைகளின் விருப்பப்படி அரசும் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம்
கொடுக்குமாயின் இந்த சமூகத்தில் திருநங்கைகள் திருப்பங்கள் அளிப்பார்கள் சிகரங்கள் பல தொடுவார்கள்.
Wednesday, April 2, 2008
இயலாமை
கண்ணுக்கு விருந்தான காட்சிகளும்
பக்கத்தில் இருந்த விரிந்த புத்தகத்தின்
பக்கங்களாய் காற்றில் பறக்க தொடங்கியது
மேலே பறந்த வண்ணத்து பூச்சிகளின்
சிறகினுள் அடைபட்ட வானமாய்
தவித்ெழுந்தது
ஏழை சிறுமியின் மீதான பார்வை...
கோடிட்டு காட்ட முயன்று
தோற்று போயின
குழவியின் விரல்கள்...
இதழ் பிரித்து மொழி பேச
இயலாமல் போனது
தூரமாய் இருந்த
கிழவியின் காய்ந்து போன
இதழ்கள்
எல்லையற்று விரிந்த
உலகின்
மீதான பார்வை
இன்னும்
மலராத மொட்டுக்களாய்.